செவ்வாய், 20 நவம்பர், 2012

Dharumapuri Attack

        தருமபுரி தாக்குதல் திட்டமிட்ட ஒன்றே ஆகும். அதைப்பற்றி பலர் எழுதி நீங்கள் அறிந்திருப்பீ ர்கள்.நான் அதற்கான தீர்வுகள் குறித்து உங்களுடன் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். 

1. அண்மைக் காலமாக இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் சாதி வெறியைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. இதனை உடனே தடுக்க சாதிக் கட்சிகளை தடைசெய்ய நடுவண் மாநில அரசுகளை வலியுறுத்தி போராட வேண்டும்.

2. தன்மானமுள்ள தலித்துகள்,சாதி மறுப்பாளர்கள் அனைவரும் இனைந்து சாதி ஆதிக்கத்திற்கு எதிரான பரப்புரையைத் தமிழத்தின் பட்டிதொட்டி எங்கும் செய்ய வேண்டும்.

3. வரும் நாடாளுமன்றத் தேர்தல் உட்பட அனைத்துத் தேர்தல்களிலும் சாதிக் கட்சிகளைப் புறக்கணிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விட வேண்டும்.
4.தலித் மக்கள் தாக்கப்பட்டபோது மௌனம் சாதித்த மற்றும் குரல் கொடுக்காத தகிடுதத்தம் செய்த அனைத்து அரசியல் கட்சிகளையும் விட்டு உடனே வெளியேறும்படி தன்மானமுள்ள அனைத்து தலித்துகளையும் அறைகூவி அழைக்க வேண்டும்.

4. சாதி மறுப்பு மனம் புரிந்தோர் சங்கங்கள் ஒருங்கிணைந்து சாதிக் கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி , கொங்கு வேளாளர் பேரவை ,மூவேந்தர் முன்னேற்றக்கழகம் போன்ற இன்னபிற சாதி வளர்க்கும் சதிகாரக் கட்சிகளை எதிர்த்துப் போராட வேண்டும்.. 

5. சாதிச் சங்கங்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க சட்டம் கொண்டுவர மத்திய மாநில அரசுகளை வலியுறுத்திப் போராட வேண்டும். 

6. ஒவ்வொரு ஊரிலும் அனைத்து சாதிமதங்களைச் சேர்ந்த இளைங்கர்களைக் கொண்ட சமூக நல்லிணக்கக் குழு வுருவாக்கபாப்ட்டு அக் குழுக்களுக்கு சாதி ஒழிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு காவல்துறைக்கான அதிகாரம் அக்குழுக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

அன்பர்களே.உங்கள் கருத்துக்களக் கண்டு மேலும் தொடர்வேன்.
சாதி ஒழியட்டும். தமிழினம் விடுதலை அடையட்டும்.